சித்தபேச ஸ்தோத்திரம்

சித்தபேச ஸ்தோத்திரம் – நடராஜப்பெருமானை நினைத்து மனக்கவலை அகல, நன்மைகள் பெருக

திருவாதிரை அபிஷேக காலத்தில்

அழகு கோலம் காட்டும் ஈசனே, உமக்கு நமஸ்காரம்.

சந்தன அபிஷேகத்தால் சந்தோஷத்தை அடைகிறவரே,
உலகத்தோர் அனைவரது மனக்கவலையையும் போக்கும்
மஹாப் பிரதோஷ புண்ணிய காலத்து நாயகனே, உமக்கு நமஸ்காரம்.

பிரம்மா, நாராயணன், நந்திகேசர், நாரதமுனி
இவர்களுடன் சேர்ந்து நர்த்தனம் செய்யும் நடராஜரே,
சித்தபேசனே உம்மை வணங்குகின்றோம்.