காலபைரவ அஷ்டகம்
மனப்பயங்கள் விலக, ஆரோக்கிய வாழ்வுக்கு தினமும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டிய ஆதிசங்கரர் அருளியது காலபைரவ அஷ்டகம்
போகம், முக்தி இவைகளை அளிப்பவரும்,
பிரசித்திபெற்ற அழகிய வடிவினரும்,
அடியார்களிடம் அன்பு கொண்டவரும்,
காத்தல் கடவுளாக இருப்பவரும்,
எல்லா உலகையும் தன் வடிவில் கொண்டவரும்,
நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய
சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவரே,
காசியம்பதியின் தலவரே உங்களுக்கு நமஸ்காரம்.
எனக்கு அருள் புரிவாய் ஐயனே!