Maha Shivarathri Karpam – மகா சிவராத்திரி கற்பம் என்பது என்ன?

சிவராத்திரி என்றால் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அது என்ன மகா சிவராத்திரி கற்பம்?

மகா சிவராத்திரி கற்பம் என்பது வேறு ஒன்றும் அல்ல, அது ஒரு நூல். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று தான் மகா சிவராத்திரி கற்பம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகா சிவராத்திரி என்னும் சிவனுக்கு உகந்த நாளாக சிவ பக்தர்கள் வழிபடுவர். மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்தரி அன்று சிவனை வழிபடும் முறைகள் எவை, இந்த விரதமிருந்து சிவனை வழிபடுவதால் பெறும் பேறுகள் எவை, இந்த நாளில் நோன்பிருந்து பேறு பெற்றவர்கள் இன்னின்னார் என்னும் கதைகள் முதலானவை இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. இந்த நூல் 39 குறட்பாக்களைக் கொண்ட ஒரு சிறு நூல் ஆகும்.