வெள்ளிக்கிழமை இந்தப் பூவை வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்தாலே போதும். மனம் விரும்பி, மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்!

நாளை வெள்ளிக்கிழமை! கட்டாயமாக நாம் எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமி பூஜை இருக்கும். அந்த பூஜையில் மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை வைத்து பூஜை செய்வதன் மூலம், அந்த மகாலட்சுமி தேவியை நம் வீட்டிலேயே நிரந்தரமாக அமர வைத்துக் கொள்ள முடியும். அந்த வரிசையில் மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம். வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனை பொருட்கள் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது. இந்தப் பொருட்கள் எல்லாம் நமக்கு கிடைக்காத பட்சத்தில், சுலபமான முறையில் மகாலட்சுமியை வசியம் செய்ய வேறு என்ன வழிகள் உள்ளது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களின் வரிசையில் செம்பருத்தி பூ விற்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்றும், புதன்கிழமை அன்றும் சிவப்பு நிறத்தில் ஒற்றை அடுக்கில் ஐந்து இதழ்களைக் கொண்ட செம்பருத்திப்பூவை மகாலட்சுமிக்கு சூட்டி வழிபாடு செய்து வருவதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பொருளில் ஏலக்காயும் அடங்கும் இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆனால் இந்த ஏலக்காயை எந்த பொருளோடு சேர்த்து வெள்ளிக்கிழமை பூஜையில் பயன்படுத்தினால் மேலும் நல்ல பலனை பெறலாம்? வாசனை திரவியங்களில் பட்டியலில் பன்னீருக்கு எப்போதுமே முதலிடம். பெரிய பெரிய பூஜைகள் ஹோமங்கள் இதில் வைக்கும் கலச சொம்பில் கட்டாயமாக இந்த பன்னீரும் சேர்ந்திருக்கும். ஏனென்றால் கடவுளை வசியப்படுத்த கூடிய தன்மை இந்த பன்னீருக்கு அதிகமாகவே உள்ளது.

ஏலக்காயை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய எச்சில் படாத டம்ளரில் கொஞ்சமாக பன்னீரை ஊற்றி, அதில் ஏலக்காய் பொடியை போட்டு வெள்ளிக்கிழமை பூஜையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

முடிந்தவரை வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது மகாலட்சுமிக்கு வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, வாசனை மிகுந்த தூபங்கள் போடுவதோடு, மகாலட்சுமிக்கு பச்சைக் கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்வதும் சிறப்பானது.

இதற்கு ஆகக்கூடிய செலவும் அதிகம் கிடையாது. வாரம்தோறும் மகாலட்சுமி பூஜையில் மேலே சொல்லப்பட்டுள்ள 3 பொருட்களை சேர்த்து வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுவதை கூடிய விரைவில் உங்களால் நன்றாகவே உணர முடியும். வீட்டில் இருக்கக் கூடிய தரித்திரம் நீங்கி, மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க சொல்லப்பட்டுள்ள பல வழிகளில், இந்த பூஜை முறை சுலபமானது. அனைவரும் இதை பின்பற்றி பலன் பெற வேண்டும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.