Chithirai Amavasya Vratam Procedure – சித்திரை அமாவாசையின் சிறப்புகளும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்

சித்திரை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் கொடுப்பதால் வீட்டில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

சித்திரை மாதம் என்பது திருவிழாக்கள் நிறைந்த நாள் மட்டுமில்லாமல் சித்ரா பெளர்ணமி மிக விசேஷமானது. அது ஒருபுறம் இருந்தலும், சித்திரை அமாவாசையும் மிக சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கிறது.

பொதுவாக அமாவாசை திணத்தில் தர்ப்பணம் கொடுப்பதலும், முன்னோர்களை நினைத்து 4 பேருக்கு உணவு கொடுப்பது நல்லது.

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்?

சித்திரை அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

சித்திரை மாத அமாவாசை தினத்தில் பித்ரு கடமை செய்வது மிகுந்த நற்பலன்களை தரும்.

மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக ஆச்சார்யர்கள் விவரிக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு அமாவாசை மற்றும் தமிழ் மாத பிறப்பு தினத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?: ஆண், பெண்களுக்கான விரத முறை

தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை அமாவாசை தினத்தில் நாம் முன்னோர்களின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து, படையல் வைத்து, ளுக்கு தர்ப்பணம் கொடுத்து நான்கு பேருக்கு தானம் உணவு கொடுப்பதால் எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும்.

இதனால் உங்கள் பரம்பரைக்கே மதிப்பும், மரியாதை கிடைக்கும் அதோடு, வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள், துர் அதிர்ஷ்டங்கள் நீங்கி நன்மையும், சந்தோஷமும் பெற முடியும்.