Meenam Rasi Guru Peyarchi Palangal 2018-2019 in Tamil

மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019:

அன்பார்ந்த மீன ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 08.39 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 8 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 9 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 1 ஆம் இடம் 3 ஆம் இடம் மற்றும் 5 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 1 ஆம் இடம் வெற்றி தோல்வியையும் ஆளுமையையும் 3 ஆம் இடம் இளைய சகோதரம், சிறு தூரப் பிரயாணம் மற்றும் தகவல் தொடர்பையும் 5 ஆம் இடம் புத்திர பாக்கியம் ஊக வாணிபம், பூர்வ புண்ணியம் இவற்றையும் குறிக்கும்.

மீன ராசி – தொழிலும் வியாபராமும்:

இக் காலகட்டத்தில் வருமானம் உயரும். சார்நிலை அலுவலரின் ஒத்துழைப்பினால் வேலையினை குறித்த காலத்தில் முடிக்க முடியும். பொதுவாக தொழிலில் வளர்ச்சி காணும் காலம் இது. அயல் நாட்டு பயணங்களுக்கு இடம் உண்டு.

மீன ராசி – பொருளாதாரம்:

அனாவசிய செலவுகள் தவிர்க்கப்படும். ஊக வாணிபம் கூட கை கொடுக்கும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எதிர்காலத்தை உத்தேசித்து சிறு சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் எண்ணம் உருவாகும்.

மீன ராசி – குடும்பம்:

குடும்பத்தில் குதூகலம் உண்டு. குடும்பத்தாரின் அனுசரணையைப் பெற முடியும். பாசிடிவான எண்ணங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு கை கொடுக்கும். சமூக நிகழ்வுகளில் பங்கேற்க முடியும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.

மீன ராசி – கல்வி:

மேற்கொண்ட கல்வியை இனிதே முடிக்க முடியும். ஆசிரியர் விரிவுரையாளருடன் நல்லுறவு உண்டு. எல்லாப் பணிகளுமே சுலபமாக முடியும். பொது அறிவு விருத்தி ஆகும்.

மீன ராசி – காதலும் திருமணமும்:

சிறு சிறு உரசல்கள் இருந்தாலும் அவைகளை களைந்து உறவுகளை வலுப்படுத்த முடியும். விட்டுக் கொடுக்கும் மனோபாவம் உண்டாகும். திருமணம் குறித்து தெளிவாக இருந்தால் இக்காலகட்டத்தை பயன்படுத்தி திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

மீன ராசி – ஆரோக்கியம்:

இக்காலக் கட்டத்தில் ஆரோக்கியம் பேண முடியும். எனினும் அஜீரணக் கோளாறுகளை தவிர்க்க, உணவு வேளைகளை தப்பாதிருக்கவும். நிறைய பழம் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • வருமான உயர்வு
  • வெளிநாட்டுப் பயணம்
  • குடும்பத்தில் சுப நிகழ்வுகள்
  • கல்வியில் முன்னேற்றம்
  • நல்ல ஆரோக்கியம்

பரிகாரம்:

  • வியாழக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்.
  • ஓம் பிரகஸ்பதியே நமஹ என வியாழக்கிழமைகளில் 108 முறை ஜெபிக்கவும்.