Navarathri Recipes – Pattani Masala Sundal

பட்டாணி மசாலா சுண்டல்

 

என்னென்ன தேவை?

காய்ந்த பட்டாணி-ஒரு கப், 
இஞ்சி-பூண்டு விழுது-ஒரு டீஸ்பூன், 
புதினா, கொத்தமல்லி-சிறிதளவு, 
சீரகம்- கால் டீஸ்பூன், எண்ணெய்,உப்பு-தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: 

காய்ந்த  மிளகாய்-3, 
பட்டை-சிறிய துண்டு, 
ஏலக்காய், கிராம்பு- தலா ஒன்று, 
சோம்பு- கால் டீஸ்பூன்.

எப்படி செய்வது?

காய்ந்த படடாணியை 8 மணி  நேரம் ஊறவிடவும். பிறகு,குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில்  வறுத்துப் பொடிக்கவும். வாணலயில்எண்ணெயை சூடாக்கி, சீரகம், தாளித்து ….. புதினா, கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.  இதனுடன் வெந்த பட்டாணி, உப்பு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி( விருப்பப்பட்டால் தேங்காய்  துருவல் தூவி) இறக்கவும்.