Thayumanvar Songs – சின்மயானந்தகுரு
4. சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம் அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருகிவிழிநீர் ஆறாக வாராத முத்தியின தாவேச ஆசைக் கடற்குள் மூழ்கிச் சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி தழுதழுத் திடவணங்குஞ் சன்மார்க்க நெறியிலாத் துன்மர்க்க னேனையுந் தண்ணருள் கொடுத்தாள்வையோ துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள் தொழுதருகில் வீற்றிருப்பச் சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே சொரூபாநு பூதிகாட்டிச் செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர் சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே.1 …