Tag «thiruppavai thiruvempavai lyrics in tamil»

Thiruvembavai Song 13 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 13 பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய். பொருள்: கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் …

Thiruvembavai Song 12 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 12 ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள் ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய் பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், …

Thiruvembavai Song 11 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 11 மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக் கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா! சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். பொருள்: சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் “முகேர் என சப்தம் …

Thiruvembavai Song 10 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 10 பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன் கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் …

Thiruvembavai Song 9 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 9 முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம் கணவர் ஆவார்அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம் இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். பொருள்: கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! …

Thiruvembavai Song 8 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 8 கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்? ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய். பொருள்: தோழியை எழுப்ப வந்த பெண்கள், “”அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின் …

Thiruvembavai Song 7 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 7 அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய் தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும் சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய …

Thiruvembavai Song 6 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 6 மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய் பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், “உங்களை நானே வந்து அதிகாலையில் …

Thiruvembavai Song 5 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 5 மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய் பொருள்: “”நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் …