Aayiram Kodi Thaaragai Sernthu – Ayyappan Bajanai Songs

ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து
பூரண ஒளிதரும் பூநிலவே
மார்கழி மலராய் வான் வழிமீது
காண்கின்ற நிலவே கண்மலராய் (ஆயிரம்)

தத்தித்தத்தி நடைபயன்று தரணியை அளப்பவனே
சங்கத்தமிழ் இசையில் தாலேலோ
முல்லை இதழ் விரிய முத்துச்சரமணிந்து
கொத்துமணிஅசையும் செல்வ மணியே செல்வமணியே (ஆயிரம்)

மாலை மலர் மணத்தில் மதிமுகம் எழில்பூத்து
தாலாட்டும் தென்றலில் தாலேலோ
நாளை வரும் வாழ்வு நல்வாழ்வு நீ அறிவாய்
நலம்பெறத் தொட்டிலே ஐயப்பனே கண்மலராய் (ஆயிரம்)