Intha Kaana Karunguyile – Lord Ayyappa Songs

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

மாலயிட்ட‌ நாள் முதலா உன்னோட‌ நினப்பு
ஆலையிட்ட‌ செங்கரும்பா என்னோட‌ தவிப்பு
பானகெட்ட‌ கையென‌க்கு நான் எடுத்தேன் முறப்பு
தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி
திங்கதத்தோம் சொல்லி ஆடுவொம்

நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு
ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு
நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு
ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு

ஆனைமுகத் தம்பியான‌ ஐயப்பனா உன்னையும்
ஆறுவாரம் மாலையிட்டு நோன்பிருந்த‌ என்னையும்
பாலம்போட்டு கார்த்திகையும் மார்கழியும் இணைக்கும்
தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி
திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு
புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு
கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு
புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு
எட்டடுக்கு மாளிகையோ பொன் பொருளோ எதுக்கு
எட்டரோடும் துட்டரோடும் வாழ‌ வேண்டியிருக்கு
காலடியை சேர்ந்துபுட்டா போதுமய்யா எனக்கு
தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி
திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு
இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு