Mahishiyai Theiveega Karunai – Ayyappan Bajanai Songs

மகிஷியைத் தெய்வீகக் கருணை கொண்டொரு
தேவ கன்னிகையாக்கி-தேவியை
மாளிகைப் புறமேற்றி இடது பாகம் தந்து
உலக மாதாவென்று வாழ்த்தி-ஐயன்
பிரம்மச்சர்ய கோலம் கொண்டான் (மகிஷி)

ஸ்ரீராமசுவாமிக்கு காய்கனி நெய்வேதித்த
சபரியாம் சத்யாத்ரி புத்ரி
கடித்து ருசி பார்தது நெய்வேதித்த பாபமோ
சபரியை யுகங்களாய் குரூபியாக்க
சபரியை கலியுக ராஜகுமாரன்
மரகத அழகியாய் தோற்றுவித்தான் (மகிஷி)

சதியாகப் புலிப்பாலை கேட்டோர்க்கும் கூட
அஷ்டைசுவர்யங்களைத் தந்து-மாயாய்
இருள் கொண்ட பந்தள ராணியை
விஸ்வரூபத்தால் அனுக்ரஹித்து
அசுர கர்மத்தால் விளையாடின வாபருக்கு
அத்வைத உபதேசம் செய்தான் (மகிஷி)