Pallikattu Sabarimalaikku – Ayyappan Song

Pallikattu Sabarimalaikku – பள்ளிக்கட்டு சபரிமலைக்கு

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் யமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம்

பள்ளிககட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே அய்யப்போ சுவாமி சரணம் அய்யப்போ

பள்ளிககட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே

நெய் அபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார் (சுவாமியே அய்யப்போ )

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே உன்னை பர்கவேன்டியே தவமிருந்தேன் (2)
இருமுடி எடுத்து எருமேலி வந்து ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது
அய்யனின் அருள் மலை ஏறிடுவீர் (சுவாமியே அய்யப்போ )

அழுதை ஏற்றம் ஏறும் பொழுது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார், அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துனைவருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார் (சுவாமியே அய்யப்போ )

கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலம் இன்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவா பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாத பலம் தா (2)

தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார்..
நல்ல பாதையை காட்டிடுவார் (சுவாமியே அய்யப்போ )

சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்துடுவார்
சரங்குத்தி ஆலில் கன்னி மார்களும் சரத்தினை போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்.. கதி என்று அவரை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிககட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே அய்யப்போ சுவாமி சரணம் அய்யப்போ

பள்ளிககட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே
சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (6)