Tag «ayyappan bakthi padalgal lyrics»

Harivarasanam kettu Urangiya – Ayyappan Songs

ஹரிஹவராசனம் கேட்டு உறங்கிய ஹரிஹர புத்ரா எழுவாய் அடியவன் கீதம் எனும் தேனாலே அபிஷேகங்கள் புரிவேன் என்னை உன்னிடம் அடிமையாக்கு   (ஹரிவ) ஸ்வாமியின் பாட்டுக்களே சரண மந்திரங்களாய் ஐயன் பூசையின் தொடக்கம் மாமலை ஐயன் பூசையின் தொடக்கம் அமரரும் போற்றிடும் நாதனின் நாமங்கள் மனிதரின் மனங்களில் மணக்கும் எழுவாய் விரைவாய் எழுவாய் நாதா உதயத்து திருக்கோலம் காணும் இதயத்தில் அருள் கூடும்

Paavam Kaluvidum Pamba – Ayyappan Song

பாவம் கழுவிடும் பம்பா பாவம் அழித்திடும் பம்பா பாவ நாசினி பம்பா பூரண புண்ணிய நதி நீ பம்பா (பாவம்)   புண்ணிய பம்பையில் மூழ்கிக் குளிக்காத பொன் காலை மாலைகள் உண்டோ உன் குளிர் நீரினால் பாவம் போக்காத முன்னோர் நினைவுகள் உண்டோ பம்பே பம்பே பாற்கடல் கூட உனக்குப் பின்பே பம்பா ஸ்நானம் பரமபவித்ரம் நாங்கள் செய்கின்றோம் பரமன் மைந்தன் பந்தள சபையின் உள்ளம் கனிகின்றான் (பாவம்) பழமை பழக்கம்போல் ஐயன் வரும்போது பரிமாற …

Thiyaga Raja Sangeetham – Ayyappan Songs

தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் புரந்தர சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன்   சுவாதியின் சங்கீதம் பத்மநாபன் அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் சுவாமி சங்கீதத்தின் அமுத சங்கீதத்தின் ஆரோகணம் சபரி மாமலை பாடிடும் பொழுது பக்திப் பெருகி மலை உச்சி நாடும் எனது உள்ளம் ஸ்வர ராஜ பூஜை என்றும் (தியாக) செவியினில் தேன் சிந்தும் இனிய சங்கீதத்தின் ஆரோகணம் பம்பா தீர்த்தம் கானம் என்னும் இசை சாதகத்தின் அலையாய் பெருகும் எனது மனம் ஸ்ருதி சுத்த …

Bamba Ganapathy – Ayyappan Songs

பம்பா கணபதி அன்பின் அதிபதி நன்மை அருள்கின்றாய் அய்யன் மலை வரும் மாந்தரின் இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய் சாமி சோதரானாகின்றாய்-துயரினை நீக்கியே காக்கின்றாய் தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய் கடும் பக்தி விரதத்தால் அவையாகும். அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு பூப்போல கைகளும் வணங்கி நிற்கும் பிரேதாயுகம் கண்ட அவதார மாமன்னன் சீதாபதி ராமன் இருக்கின்றான் அழகிய ராமனின் அடபோற்றும் மாருதி பக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான் என்றென்றும் மாறாத பக்திக்கு அருள்கின்றான்

Karthigai Poongavai Viratham – Ayyappan Songs

கார்த்திகை பூங்காவை விரதம் காத்திடும் திருவேளை மாலையணிந்தவர் கோவிலை நாடிட ஒன்று சேரும் நேரம் நோன்பு ஆரமப நன்னேரம் (கார்த்திகை) சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சரணம் சரணம் ஐயப்போ சாதிபேதம் ஒன்றுமில்லை சாதிபேதம் ஒன்றுமில்லை ஏற்ற தாழ்வு ஏதுமில்லை மாலையிட்ட மாந்தர்க்கு மனம் சுத்தமாகும் – என்றும் மணிகண்டன் புகழைப்பாட மகிழ்ச்சிகள் கூடும் (கார்த்திகை) பேட்டை துள்ளி பாட்டுப்பாடி பேட்டை துள்ளி பாட்டுப்பாடி காடுகளும் மலையுமேறி கூட்டமுடன் பதினெட்டாம் படிகளேறி சுவாமியைக் கண்டு …

Sabari Iyane Nesa – Ayyappan Song

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா சரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி) திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி)   மனசந்தனாபிஷேக தயாபரா ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன் மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா)   மணிகண்டா மகிஷிமர்த்தனா புனித …

Sabarimalaivasa Deva Saranam

சபரிமலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா – தேவா சபரிமலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா – தேவா உறவு எல்லாம் சுவாமி உண்மையில்லை சுவாமி உறவு எல்லாம் இங்கே உண்மையில்லை பிறவிப் பயன் பெற அருள் ஈசா ( சபரிமலை)   வாழ்க்கை எனும் பயணம் காரிருளில் ஐயா வழி அறியாதலையும் நேரம் – உன் திருதீபத்தின் பொன்னொளி காட்டியே அருள்மழை பொழிகுவாய் ஐயப்பா – உன்னை அடைந்திட வழி செய்வாய் மெய்யப்பா (சபரிமலை)   …

Kannimalai Sami Saranam – Ayyappan Songs

கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலையும் ஏறி பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலையும் ஏறி பதினெட்டாம்படி நடந்து போவது எப்போது மண்டல விளக்குக்கோ மகர விளக்குக்கோ ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம் அதிகாலை களிச்செழுந்து புலிவாகனனை போற்றி ஒரு நூறு சரணங்கள் நீங்க அழைச்சு குருத்தோலை பந்தலிட்டு இருமுடிகள் நிறைச்சுவச்சு திருயாத்திரைக்காக நீங்கள் விரைந்து செல்லணும் ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம் ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம் …

Ella Thunbamum Theerthiduvai – Ayyappan Song

எல்லாத் துன்பமும் தீர்த்திடுவாய் பொன் ஐயா சபரிவாசா (எல்லா) பொல்லா நோய்களும் நீங்கிடவே மலர்க்கையால் அருள்புரிவாய் – தேவா எம்மை ஆதரிப்பாய் (எல்லா) பாழாய் நாளைப் போக்காமல் உன் நாமம் நாவால் உரைப்போமே மாயாலோக வாழ்க்கையில் மதபேதப் பேய்கள் ஓட்டிடுவோம் போகம் தேடி அலைந்து திரிவோர் ஒரு கண சுகமென அறியாரே (எல்லா) கைகளும் கால்களும் தளர்ந்திடவே மனமதும் அவதியில் துடித்திடவே அகிலாண்டேசுவரா அபயம் நீ என்று அறிந்திட்டோம் நாங்கள் அழைக்கின்றோம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் …