Sabarimalai Sentru Tharisanam Parthalum – Lord Ayyappa Songs

சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும்

சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும்
தாளாது என் ஆசை ஐயப்பா

தாளாது என் ஆசை ஐயப்பா
பண்பான பக்தர்கள் இல்லாததால் இங்கு
பசிப்பிணி வாட்டுதே ஐயப்பா.

சேயாக நீயும் குருவாக நானும்
கூட்டி வந்தேனே ஐயப்பா
தீராது தீராது சொன்னாலும் தீராது
தீர்க்கும் வழியென்ன ஐயப்பா.

அறியாத பக்தர்க்கு மனதோடு உறவாடி
அறிவை கொடுத்து அறிய வையப்பா
மனமிருந்தால் வழி பிறக்கும்
அருளிருந்தால் உனை அறிந்திடுவேன்
தர்ம சாஸ்தாவே சபரி ஐயப்பா.