Saranam Solli Koopiduvom Sabarimalai Vasanai – K. Veeramani Ayyappan Songs

சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை

வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை
அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர‌ சுதன் ஐயப்பனை

வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ்
சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசர் மைந்தனை

ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா ||

சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை
பயம் தனையே போக்கிடுவான் பந்தளத்தின் பிள்ளை
அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை
அவனின்றி அவனியிலே அணூவும் அசைவதில்லை

வீட்டை விட்டு கட்டும் கட்டி
அருள்மலை புறப்படுவோம்
கூட்டுச் சரணம் போட்டு எருமேலிப்
பேட்டை செல்லுவோம்
பேட்டைத் துள்ளி ஆடும்போது
பேரின்பம் கொள்வோம்
கோட்டைக் காவலன் வாவரு சாமியை
கொண்டாடி மகிழ்வோம்

ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு
ஈரொன்பது படியேறி ஈசன்பதம் நாடு
பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு
நாராயணன் செல்வனையே நாவினிக்கப்பாடு (ஸ்வாமி சரணம் ஐயப்பா)