Thiruppugazh Song 243 – திருப்புகழ் பாடல் 243

திருப்புகழ் பாடல் 243 – திருத்தணிகை
ராகம் – அஸாவேரி; தாளம் – மிஸ்ரசாபு
தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தான தனதன தான
தனதன தான …… தனதான

இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி …… விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை …… யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு …… முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் …… அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக …… இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை …… விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லு஡ர்தி
தருதரு மாதின் …… மணவாளா

சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு …… பெருமாளே.