Ullathil Unnaiye Theivamai Enniye – Ayyappan Bajanai Songs

உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே
சன்னிதானம் நாடியே சரணடைந்தேன்
அருளை அள்ளி அள்ளி தந்து காக்கவே
மலைமேல் அமர்ந்திருக்கும் இறைவா
ஐயப்பா ஸ்ரீசிவஹரி பாலா (உள்ள)

பந்தளத்தின் மன்னனே பார்புகழ்நாதனே
எந்தன் மனம் வாழ்த்திப்பாடும் தேனமுதே
கைகுவித்து வணங்கிட மெய்குளிரச் செய்பவனே
தைமகரஜோதியான ஆண்டவனே
சத்தியத்தின் நாயகன் புத்திரத்துப்பிறந்ததை

வண்ணமலர் சோலையாம் வையகமும் வாழ்த்துதே
ஐயா சரணம் ஆண்டருள் என திருவடி பணிந்தேன் (உள்ள)

விண்ணகத்தின் நிறங்களே உந்தன் நிறமாகும்
மண்ணகத்தின் மைந்தனே மாமணியே
என்னகத்தில் உண்மையாய் இருந்திடும் இறையுணர்வே
எண்ணங்களில் கருப்பொருளாய் வாழ்பவனே
சன்னதி வணங்கினேன் சந்ததி வாழ்ந்திட
கரணையின் காட்சியே அடியவர் மாட்சியே
ஐயா சரணம் ஆண்டருள் எனசேவடி தொழுதேன் (உள்ள)