வெண்பனிக் குளிரினில் பொதிகைமலை
மென் தென்றல் வீசிடும் சபரிமலை
விண்ணவனும் போற்றிடும் கண்கொள்ளாக்காட்சியே
காந்தமலைஜோதி ஐயப்ப சுவாமி (வெண்)
சுடரும் விளக்கொளியில் அருள் வடிவாய்
தூண்டா மணி விளக்கின் எழில் உருவாய்
வேண்டியவர் வேண்டியதை ஐயப்பன் தந்திடுவான்
கீதங்கள் பாடிச் செல்வோமே சபரிமலை (வெண்)
நம்பிய பக்தர்களின் நாயகனாய்
நலிந்தவர் வாழ்வினிலே நலம் தருவான்
இருமுடீ தாங்கியே திருவடி காணவே
அடியவர் ஒன்றாய் அடைவோமே சபரிமலை (வெண்)