Angalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்

அங்காளம்மன் ஸ்லோகம்

ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், உங்கள் பூஜையறையில் உள்ள அம்மன் படத்தின் முன்பாகவோ அல்லது அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றோ அம்மன் முன்பாக ஒரு நெய்தீபம் ஏற்றி, உங்கள் பிரார்த்தனைகளை மனதில் நிறுத்தி கொடுக்கப்பட்டுள்ள அங்காளம்மன் சுலோகத்தை 27 முறை அல்லது 108 முறை சொல்ல வேண்டும்.

இப்படி சில வாரங்கள் செய்து வர உங்களின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி மங்கள கரமான வாழ்க்கையை அருள்புரிவாள் அங்காளம்மன்.