Ethinai Piravi Naan Eduthaalum – Lord Ayyappa Songs

எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும்

ஸ்ரீ வீர தேவரகிலமும் ஓம்காரமாய் விளங்க
ஸ்ரீ சபரிகிரீஷ்வரராய் மணிப்பீடத்தில் அமரக் கண்ட விடரி
என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய்
நம்பினவர்க்கு ஆதரவுற்று அருளும் ..
ஐயன் ஐயப்பனே சரணம் …..
ஐயன் ஐயப்பனே ……. சரணம் …………………….

எத்தினை பிறவி நான் எடுத்தாலும்
உன் மலை ஏறும் வரம் வேண்டும்
ஐயப்பா.. ஐயப்பா

பாரோர் போற்றும் பரமனின் மகனே
பந்தளத்தரசே வர வேண்டும்
பாரோர் போற்றும் பரமனின் மகனே
பந்தளத்தரசே வர வேண்டும் (எத்தனை பிறவி)

ஏதோ நினைவினிலே உழலும் வாழ்வினிலே
ஒளியாய் உன்னருள் தான் தர வேண்டும் …

இதய சுமைகளை இறக்கிடவே வந்தேன்
இருமுடி சுமந்தே வருகின்றேன்
இதய சுமைகளை இறக்கிடவே வந்தேன்
இருமுடி சுமந்தே வருகின்றேன்

இமயம் முதல் நானும் குமரி வரை இன்று
இருகரம் கூப்பி உன்னை பணிகின்றேன் (எத்தனை பிறவி)

அய்யப்பா… அ..அ.அ.
அய்யப்பா…
அய்யப்பா…அ..அ.அ.
அய்யப்பா…
அய்யப்பா….
அய்யப்பா….
அய்யப்பா….

சபரி நாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
சபரி நாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
சகல வினைகளும் சகல பிணிகளும் சகல குறைகளும் அகலுமாம்..
சகல வினைகளும் சகல பிணிகளும் சகல குறைகளும் அகலுமாம்..

மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்
மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்..

மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவாய்..
மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவாய்…

சுவாமியே சரணம்..
சுவாமியே சரணம்…
சுவாமியே சரணம் அய்யப்பா…

சுவாமியே சரணம்..
சுவாமியே சரணம்..
சுவாமியே சரணம் அய்யப்பா…

சுவாமியே சரணம் அய்யப்பா

வில்லாலி வீரனே சரணம் அய்யப்பா
வீர மணிகண்டனே சரணம் அய்யப்பா
என் குல தெய்வமே சரணம் அய்யப்பா
அனாத ரக் ஷ்கனே சரணம் அய்யப்பா
ஆபத் பாந்தவனே சரணம் அய்யப்பா..

சத்யமான பொன்னு பதினெட்டாம் படி முகடில் வாழும் ௐம் ஸ்ரீ ஹாரி ஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யாப்பா !!!