Thakirthithan Thottathil Mukkannan – Ayyappan Bajanai Songs

தகிர்தித்தான் தோட்டத்தில் முக்கண்ணன் திருமலையின்
ஸ்ரீமூலத் திருமரமாய் பூத்து நிற்க
பகவான் பூஞ்சுவடில் பூஜித்த யவன கன்னிகையை
ஜீவ கலகமாய் பாவிக்க
தேவ மகரந்தம் ஸ்ரீ ரூப அலங்காரம்
வாபராய் பூமியில் பிறப்பெடுத்தான் (தகிர்)

நாலாம் வேதத்தின் பொருளறிந்து
மானிட நட்பெனும் ஆனந்த தத்துவம்
அத்வைத ரூபனாம் ஐயனின் தோழனாகி
பந்தள பெரும் படைக்கு தலைமை தாங்கி (தகிர்)

உதயனைப் போரில் வென்று பூஜை செய்தான்
வாபர் பகவானின் பாதாரவிந்தமே
குருசபரீசனின் தாஸானு தாஸனாக
எரிமேலி பேட்டையில் பள்ளி கொண்டான் (தகிர்)