Deepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது?- நரகாசுரனின் கதை இதோ

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி திருநாளின் பின்னனியில் இருக்கும் நரகாசுரனின் புராண கதை குறித்து விரிவாக பார்ப்போம்…

தீபாவளி புராண கதைகள்

இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் தீபாவளி பண்டிகை மிக முக்கியமான ஒரு பண்டிகை. தற்போது அதன் பின்னணியில் உள்ள புராணக் கதைகள், காரணங்களைத் தாண்டி வியாபாரத்திற்கான முக்கிய பண்டிகையாக மாற்றப்பட்டு வருகின்றது.

நரகாசுரனின் கதை:

நரகாசுரனை கொன்ற நாளை நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றோம்.
பூமா தேவியின் புதல்வன் நரகாசுரன். அவனின் தந்தை வராகன். இவன் வானா சுரனுடன் சேர்ந்து மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். மிக சக்தி வாய்ந்தவனாக இருந்த நரகாசுரன் மண்ணுலகத்தை தாண்டி விண்ணுலகத்தையும் ஆள வேண்டும் என ஆசை கொண்டான்.

இதற்காக அரசவை கூட்டி தன் முடிவை தெரிவித்தார். ஆனால் அவரது அமைச்சர் ஒருவர், தேவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களை வெல்வது சாதாரண விஷயம் அல்ல. அதனால் நீங்களும் சாகா வரம் பெற வேண்டும். அதன் பின்னர் மூன்று உலகத்தையும் நீங்கள் எளிதாக கைப்பற்றலாம் என கூறினார்.

வரம் பெற்ற நரகாசுரன்:

சாகா வரம் வேண்டி கடும் தவம் மேற்கொண்டான் நரகாசுரன். அவன் முன் தோன்றிய பிரம்ம தேவனிடம் சாகா வரம் தரும் படி கேட்டான். ஆனால் பிறந்த ஒருவன் இறந்தே ஆக வேண்டும். அதனால் வேறு ஏதேனும் ஒரு வரம் கேட்க சொன்னார்.

இதையடுத்து, தன் தாயின் கையால் தான் இறக்க வேண்டும். எந்த ஒரு தாயும் தன் மகனை கொல்ல மாட்டாள் என்பது தான் அவனின் யோசனை. அந்த வரத்தை பிரம்மன் வழங்கினார்.
இறவா வரம் பெற்றதாக எண்ணிய நரகாசுரன் மேலும் தன் கொடுமையை அதிகரித்தான்.நரகாசுரன் தேவலோகத்திற்கு சென்று கைப்பற்றினான். 16,100 தேவர்களையும் கைது செய்தான். அதோடு இந்திரனின் தாய் அதிதியின் காதணியையும் பறித்து சென்றனர் அசுரர்கள்.

அங்கிருந்து தப்பிச் என்ற இந்திரன், தங்களை காப்பாற்றுமாறு மகா விஷ்ணுவிடம் வேண்டினர். தற்போது கிருஷ்ண அவதாரம் நான் எடுத்துள்ளேன். அவரிடம் முறையிடுங்கள் அவர் உங்களுக்கு உதவுவார் என்றார்.

நரகாசுரனை அழித்த சத்யபாமா:

கிருஷ்ணரிடம் உதவி கேட்ட இந்திரனிடம், நரகாசுரனை அழிப்பதாக உறுதி அளித்தார். அவனுடன் போரிடச் செல்வதாக கூறிய கிருஷ்ணரிடம், தானும் வருவதாக அவரது மனைவியான சத்திய பாமா கூறினார்.
நரகாசுரனுடன் போரிட்ட கிருஷ்ணன், அவனது சேனைகளைத் துவம்சம் செய்தார். ஆனால் நரகாசுரனின் தாயான பூமாதேவி தான், இந்த அவதாரத்தில் சத்யபாமாவாக,கிருஷ்ணரின் மனைவியாக அவதரித்திருந்தார்.

நரகாசுரனின் சேனையால் தான் காயமடைந்து மயக்கமானது போல் கிருஷ்ணன் நடித்தார். இதனால் மிகவும் கோபமடைந்த சத்யபாமா, நரகாசுரன் மீது அம்பு தொடுத்தான்.

சஷ்டி விரதம் எப்படி இருப்பது, என்ன பலன் கிடைக்கும்?

சத்யபாமாவின் அம்பு துளைக்க நரகாசுரன் மண்ணில் சாய்ந்து உயிரை துறந்தான். அவன் சாகும் தருவாயில் தான் நரகாசுரனுக்கு பூமாதேவியின் அவதாரம் தான் சத்திய பாமா என்றும், நரகாசுரன் தான் அவனின் மகன் என்றும் சத்யபாமாவும் உணர்ந்தார்.

தியாகத்திற்கான பண்டிகை:


தன் மகன் என்றும் பாராமல், மக்களை கொடுமைப் படுத்திய நரகாசுரனைக் கொன்ற சத்திய பாமாவின் தியாகத்தை போற்றும் விதமாகவும், நரகாசுரன் கொல்லப்பட்ட தினத்தைத் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.