Achan Kovil Arase – Ayyappan Songs

அச்சன் கோவில் அரசே

அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்கவா
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா
இச்சைகொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா
பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா

ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா

ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா
பார்வதியால் அகமகிழும் பாலகனே வா
எருமேலி வீற்றிருக்கும் இறைவனே நீ வா
தர்மஞான சாஸ்தாவே தயவுடனே வா

ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா

மலைவீடும் சபரிமலை மன்னவனே வா
குறைதீர்க்கும் குளத்துப்புழை பாலனே நீ வா
மன்னவனே மணிகண்டனே மகிழ்வுடனே வா
வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா

ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா

தேவர்களும் உனைப்பணிய காந்த மலையிலே
நீ ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே
காவலனே கண்ணாரக் கண்டோமே ஜோதி தனை
நாவார உனை அழைத்தோம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா