Sami Arul Ennalum – Ayyappan Songs

சாமி அருள் எந்நாளும் நெஞ்சில் நிலைக்க
ஆதார சொந்தமே குருசாமி
வான்மழை பூமிக்கு ஆதாரமது போல
நான் கண்ட பாக்கியம் குருசாமியே
ஐயன் ஐயன் ஐயன் ஐயப்ப சாமி

 

(சாமி)

 

பக்தியே இதயத்தில் மலர்ந்து ஞானமெனும் கனி
பெறக் குருவன்றோ வேராகும்-இருமுடிதான்
கொண்டே நல்வழிதான் சேர படிகள் காட்டிடும்
அருள்தீபம் என்குருசாமியே என் யோகம்
(சாமி)

 

மாலையைப் போட்டதும் குருவாகும் நேர்மையை
நானுமே உணர்த்திடச் செய்தாரே-மலையிலே
எழில் பொன்முகமே நான் காண-குரு
வழி செல்கின்றேன் தினம்தோறும்
ஐயன் ஐயன் ஐயப்பன் துணை வேண்டும் (சாமி)