Athithya Haruthayam – Lord Vishnu Slogas

ஆதித்ய ஹ்ருதயம் – 26-31

ஆதித்ய ஹ்ருதயம் (26 முதல் 31 வரை)

பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

தேவதேவம் – தேவர்களுக்கும் தெய்வமானவனை

ஜகத்பதிம் – உலகத்தை உடையவனை

பூஜயஸ்வைனம் ஏகாக்ரோ – ஒரு நிலைப்பட்ட மனத்துடன் வணங்குவாய்.

ஏதத் – இந்த ஸ்தோத்திரத்தை

த்ரிகுணிதம் ஜப்த்வா – மும்முறை ஜபித்து

யுத்தேஷு – போரில்

விஜயிஷ்யஸி – வெற்றி பெறுவாய்

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம ச யதா கதம்

அஸ்மின் க்ஷணே – இந்த நொடியிலேயே

மஹாபாஹோ – பெரும் தோள்வலிமை உடையவனே

ராவணம் த்வம் வதிஷ்யஸி – இராவணனை நீ வதைப்பாய்

ஏவம் உக்த்வா – இப்படி சொல்லிவிட்டு

ததா அகஸ்த்யோ – அங்கிருந்த அகத்தியர்

ஜகாம ச யதா கதம் – எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத் ததா
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவாந்

ஏதச் ச்ருத்வா – இதனைக் கேட்டு (இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்ரத்தைக் கேட்டு)

மஹாதேஜா – பெரும் வலிமையுள்ளவனும்

தாரயாமாஸ – நோக்கத்தில் உறுதியுள்ளவனும்

சுப்ரீதோ – மிகவும் மகிழ்ந்தவனும்

ராகவ: ப்ரயதாத்மவாந் – முயற்சிகளில் சிறந்தவனும் ஆன இராகவன்

நஷ்ட சோகோ பவத் ததா – அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்சம் அவாப்தவாந்
த்ரிர் ஆசம்ய சுசிர்பூத்வா தநுர் ஆதாய வீர்யவாந்

த்ரிர் ஆசம்ய – மும்முறை ஆசமனீயம் செய்து

சுசிர்பூத்வா – சுத்தமடைந்த உடலினை அடைந்தான்

தநுர் ஆதாய – வில்லை ஏந்தியவன்

வீர்யவாந் – வீரத்தில் சிறந்தவன்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து – ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (இந்த ஸ்தோத்ரத்தை) ஜபித்து

பரம் ஹர்சம் அவாப்தவாந் – மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வ யத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் – போர் செய்யும் நோக்கத்துடன் வரும்

ராவணம் ப்ரேக்ஷ்ய – இராவணனைப் பார்த்து

ஸர்வ யத்னேன மஹதா – மேலான எல்லா முயற்சிகளுடனும்

வதே தஸ்ய த்ருதோபவத் – அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

அத ரவி ரவதந் நிரீக்ஷ்ய ராமம்
முதிதமநா பரமம் ப்ரஹ்ருஷ்யமான:
நிசிசரபதி சம்க்ஷயம் விதித்வா
சுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி