Vaanagam Potrum – Ayyappan Songs

வானகம் போற்றும்

வானகம் போற்றும் எங்கள் ஐயப்பா, நீ வரம் தர வந்திடுவாய் ஐயப்பா
எனை ஆளும் பெருமானே, நினைவெல்லாம் நீ தானே
உன்னை பாடாத நாளில்லை ஐயப்பா (வானகம்)

சரணம் சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
கரிமாமலை மேலே ஏறி வந்தேன், அருள் தரும் சரணங்களை கூறி வந்தேன்
இருமுடி தாங்கியே நான் ஓடிவந்தேன், திருவடி கமலங்களை வேண்டி நின்றேன்
புலியின் மீதிலே நீ வர வேண்டும், கலியுக நாதனே காத்திட வேண்டும்
உன்னை பாடாத நாளில்லை ஐயப்பா (வானகம்

சரணம் சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா

அய்யனே கார்த்திகையில் மாலையிட்டேன், பக்தியுடன் நாற்பது நாள் நோம்பிருந்தேன்
மெய்யனே உன் புகழை பாடி வந்தேன், நெய் அபிஷேகம் தன்னை காண வந்தேன்
உனையே நினைந்து உருகி நின்றேனே, உன் பதம் நாடியே மகிழ்ந்திருந்தேனே
உன்னை பாடாத நாளில்லை ஐயப்பா (வானகம்)

சரணம் சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா