Ayyappan Songs – Aayiram Deepangal

ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள்

ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் கண்ணில் தெரியுது
பம்பையாற்றில் மணிகண்டன் பிறந்தது பம்பையாற்றில்

(ஆயிரம் தீபங்கள்)

சரணம் சரணம் ஐயப்பா சரணாகரனே ஐயப்பா
சரணம் சரணம் சரணாகரனே ஸ்ரீ மணிகண்டா

(சரணம் சரணம்)

எரிமேலிதானே சென்றிடுவோம் பேட்டைதானே துள்ளிடுவோம்
பேட்டைதுள்ளி வாபரை வணங்கி வனத்தின் நடுவே சென்றிடுவோம்

(ஆயிரம் தீபங்கள்)

அழுதா நதியை அடைந்திடுவோம் அளவில்லா இன்பம் கொண்டிடுவோம்

அழுதையில் மூழ்கி கல்லினை எடுத்து கல்லிடும் குன்றில் இட்டிடுவோம்

(ஆயிரம் தீபங்கள்)

கரிமலை ஏற்றம் ஏறிடுவோம் கரிமலை அம்மனை வணங்கிடுவோம்

கரிமலை அம்மனை வணங்கிக் கொண்டு வனத்தின் நடுவே சென்றிடுவோம்

(ஆயிரம் தீபங்கள்)

கரிமலை இறக்கம் இறங்கிடுவோம்
பம்பா நதியை அடைந்திடுவோம் பம்பா சக்தி நடத்திடுவோம்
பம்பா சக்தி நடத்தி சென்று பம்பா வாசனை வேண்டிடுவோம்

(ஆயிரம் தீபங்கள்)

பதினெட்டுப் படியை அடைந்திடுவோம் படியில் தேங்காய் உடைத்திடுவோம்
படியில் தேங்காய் உடைத்து சென்று நெய்யபிஷேகம் செய்திடுவோம்.

(ஆயிரம் தீபங்கள்)